பொங்கல் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்..!

Published by
லீனா

பொங்கல் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை உலகிற்குச் சொல்லும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளில் உலகம் முழுக்க வாழ்கிற தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் நம்முடைய முன்னோர் நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் திருநாளை வடிவமைத்திருக்கிறார்கள்.

பொங்கல் என்பது நமக்கு அறுவடைத்திருநாள் மட்டுமல்ல; உலகின் மூத்த குடியான தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றுவதற்கும், போற்றி கொண்டாடுவதற்குமான திருநாள். அதனை மனதில் கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனத்தின் பெருமைகளை உயர்த்தி பிடித்திடுவோம்.

போகியில் பழையன நீங்கி ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று நம்முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும். எல்லா வளங்களையும், நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டுவந்து சேர்க்கட்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

37 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago