பள்ளிகள் திறக்கப்படும் வரை உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்படும் -தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சத்துணவு திட்ட தொடக்கப்பள்ளி மற்றும் உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
அதன்படி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் , பருப்பு 40 கிராமும், உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 150 கிராமும், பருப்பு 56 கிராமும் வழங்கப்படும்.