போதை பொருட்களை தடுப்பதில் புதிய வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் பேச்சு.
அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது, போதைப்பொருட்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், போதைப்பொருட்களை வேரோடு ஒழிப்பதுதான் திமுக ஆட்சியின் இலக்கு.
போதைப் பொருட்களை தடுப்பதில் ஜன.3-ல் ஆய்வு கூட்டம் நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை என்பதால் செய்தி வரவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். போதைப்பொருள் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கண்டும் காணாமல் இருந்ததால் தான் நாங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார்.
நீங்கள் எடுத்த நடவடிக்கைக்கும், நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கும் குட்கா வழக்கே சாட்சி. 10 ஆண்டு கால ஆட்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்தப்பட்டதே கிடையாது. தற்போது, போதை பொருட்களை தடுப்பதில் புதிய வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு அரசு எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதிலளித்தார்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…