போதைப்பொருள் விற்பனை – இந்து முன்னணி நிர்வாகி கைது!

Default Image

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட இந்து முன்னணி நிர்வாகி கைது. 

போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதனை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் பொன்னம்மாள் பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட எட்டு கிலோ போதை பொருட்கள் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி இடம் இருந்து குட்கா வாங்கி வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து,  இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்