நாகையில் உள்ள தெத்தி பகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் மேலே பறந்த ட்ரோன் பறந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகையில் உள்ள தெத்தி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 சட்டமன்றத் தொகுதிகளாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை பத்து நிமிடத்திற்கு மேலாக அந்த தனியார் கல்லூரி மேலே ட்ரோன் பறந்துள்ளது.
ட்ரோனை பறக்கவிட்ட மூன்று பேரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் கேமரா பதிவு செய்த காட்சிகளை வைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுகவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…