கோவையில் நாளை முதல் டிரோன் பறக்க தடை..!

Default Image

கோவை சூலூர் இராணுவ விமானபடை தளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் வரும் 6-ம்தேதி வரை டிரோன் பறக்க தடை.

குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு சூலூர் விமானநிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 03.08.2021 முதல் 06.08.2021 வரை பறக்கும் கலம் (Drone) பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தலைவர் அவர்கள் 03.08.2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு சூலூர் விமானநிலையம் வருகை தர உள்ளார். அதனையொட்டி, பாதுகாப்பு கருதி, கோயம்புத்தூர் மாவட்ட சூலூர் விமானம் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  03.08.2021 முதல் 06.08.2021 வரை பறக்கும் கலம் (Drone) பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இதனை மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack