இரு சக்கர வாகனத்தில் மோதாமல் காரை திருப்பிய டிரைவர்..! சிறுவன் உயிரழப்பு ..!

Default Image

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சார்ந்தவர் முத்தையா.இவர் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் நடைபெறும்  உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று உள்ளனர்.காரை சிவன் என்பவர் ஒட்டிக்கொண்டு சென்று உள்ளார்.
இவர்கள் சென்ற கார் கரடிக்கல் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சிவன் காரைத் திருப்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
இதனால் கார் சாலையில் உருண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சக்திவேல் என்ற 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்