திராவிட இயக்கங்கள் தமிழ்,தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்- ஹெச் ராஜா.!

Default Image

7 பேர் விடுதலை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் ஆளுநரிடம் தள்ளி விடுவது ஏற்புடையதல்ல என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா , நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு உத்தரவால் அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். விடுதலை பண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும். எனவே 7 பேர் விடுதலை குறித்து கவர்னரிடம் நீதிமன்றம் மாற்றியுள்ளது எனக்கு ஏற்புடையது அல்ல.

7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் ஏன் சொல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். இந்த7 பேர் விடுதலையில் காங்கிரஸ், திமுக ஒரு கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். உயிரிழந்த அதிகாரிகள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? இன்று உடம்பில் குண்டு பாய்ந்த நிலையில் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து  கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் இல்லையா..? திராவிட இயக்கங்களும் தமிழ், தமிழன் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என தெரிவித்தார்.

மேலும், திமுக 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது எனக் கூறுகிறது என ஹெச் ராஜா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்