திராவிட சிந்தனை கொண்ட அரசிடம் இந்த 5 முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் – சசிகலா

Default Image

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.

சசிகலா அறிக்கை 

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வி.கே.சசிகலா அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு மகிழ்ச்சியை அளிக்குமே தவிர சாமானிய மக்களுக்கு எந்த பலனும் சென்று சேர போவது இல்லை. ஏற்கனவே திமுக ஆட்சியில் இது போன்ற அலங்கார அறிக்கைகளைப் பார்த்து தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை பார்க்கும்போது இது சாமானிய மக்களின் நலறுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை. இது கார்பரேட்களுக்கு உதவிடும் பட்ஜெட்டாகத்தான் தெரிகிறது.

திராவிட சிந்தனை கொண்ட அரசானது ஐந்து முக்கிய அம்சங்களை எந்நாளும் கடைபிடிக்க வேண்டும் என்பதை தம் ஒப்பற்ற தலைவர்களின் மூலம் நான் கற்றுக் கொண்டது. அதாவது

(1) அன்றாடம் ஒவ்வொரு மனிதனின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அரசாக இருக்க வேண்டும்.

2) மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பேணி காத்திட வழிவகை செய்ய வேண்டும்.

3) கடைக்கோடி தமிழனுக்கும் தரமான கல்வி கிடைத்திட உறுதி செய்திட வேண்டும்.

4) அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

5) கிடைத்த வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டும்.

இந்த ஐந்து முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு தான் ஒரு அரசானது நிதி ஒதுக்கீடு செய்வதை வரையறுக்க வேண்டும்.

திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது 

தமிழகத்தில் தற்போது உள்ள நிதி பற்றாக்குறையானது கொரோனா; சார்ந்த காரணங்களாலும் மற்றும் பல்வேறு உலக நிகழ்வுகளாலும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இருந்தபோதும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் ஒரு தாய் எவ்வாறு தனது வாயையும், வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளை காப்பாற்றுவாரோ அது போன்று, ஒரு அரசு தன் சொந்த தேவைகளை குறைந்து கொண்டு மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் செயல்படவேண்டும் ஆனால் திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது. எனவே

“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்”.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்