ஆ.ராசாவுக்கு ஆதரவு.! மனுசாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும்.! சென்னையில் ஆர்ப்பாட்டம்.!

Default Image

மனு தர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா, மனு ஸ்மிருதி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, திராவிடம் விடுதலை கழக பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் குறித்தும் இழிவான கருத்துகளை கொண்டுள்ள மனு சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும் உணவு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்