கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்! மத்திய சமூக நீதி துறை அதிர்ச்சி தகவல்!

Published by
மணிகண்டன்

சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், இந்தியாவில் 1993 முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணிகளின் போது விஷவாயு தாக்கி, மற்ற விபத்துகளின் மூலமாகவும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். ‘

அதில் வருத்தப்படகூடிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக 3 வருடத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்திரபிரதேசத்தில் 71 பேரும், ஹரியானாவில் 51 பேரும், உயிரிழந்துள்ளனர். இதில், 15 மாநிலங்களில் உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கெடுக்கபட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் கழிவுகளை சுத்தம் செய்கையில் உயிரிழந்திருப்பது வெட்ககேடானது. இதனை சரி செய்ய தமிழக அரசிடம் பணமில்லையா அல்லது மனமில்லையா என கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘ அவ்வாறு உயிரிழந்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என விசாரித்து பாருங்கள்.’ என கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ கழிவுகளை அகற்ற புதிய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

6 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

12 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

24 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

1 hour ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago