#Breaking:திமுகவில் இணையும்,மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன்…!

Default Image
  • மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன்.
  • திமுகவில் இணையவுள்ளதாகவும்,அதற்காக இன்று அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியும் போட்டியிட்டது.ஆனால்,மக்கள் நீதி மய்யம் கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.மேலும், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், குமரவேல், மவுரியா,சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்ட பல நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.இதனால்,இது அக்கட்சியினரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,டாக்டர் மகேந்திரன் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாகவும்,

இதற்காக,டாக்டர் மகேந்திரன் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்