#Breaking: “தடுப்பூசி குறித்த சந்தேகமா? இந்த எண்ணுக்கு அழையுங்கள்”- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Published by
Surya

சென்னையில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கட்டுபாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாள் ஒன்றுக்கு 2,500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சில கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்பாகவும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்கலாம் என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டை விட கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறிய அவர், சென்னை மக்கள் பயன்பெற இந்த கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!

ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…

47 minutes ago

கம்பேக் இப்படி இருக்கனும்! வசூலில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி!

சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …

2 hours ago

தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!

சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

3 hours ago

இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…

5 hours ago

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…

6 hours ago