தினகரனை இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விடுவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது நீதிமன்றம்.
இது தொடர்பாக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை விசாரித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது. குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இதனால் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
அதேபோல் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தினகரனை விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.
வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி தினகரனை நேரில் ஆஜராகவும் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் விடுவிக்க மறுத்தது மட்டும் அல்லாமல் டிசம்பர் 4 ஆம் தேதி தினகரனை நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் தமிழக அரசியலே இந்த டிசம்பர் 4 ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் அதிமுக மற்றும் அமமுக இடையேயான போட்டி ஆகும்.இதனால் இந்த வழக்கில் ஏதும் சதி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அதிகமாக இருந்து வருகிறது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…