எந்த சூழ்நிலையும் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக களத்தில் நின்று சண்டை செய்தவர் பிரபாகரன். தேவையின்றி மக்களை குழப்ப வேண்டாம். சீமான் கருத்து.
இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் , அவர் குடும்பத்தாருடன் தான் தொடர்பில் இருப்பதுவும், அவர்களின் அனுமதியோடு இந்த தகவலை கூறுவதாகும் அவர் தெரிவித்தார்.
இந்த தகவலை அடுத்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி தவறாமல் மேடைக்கு மேடை புகழ்ந்து பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ஈரோட்டில் இந்த தகவல் குறித்து தனது கருத்தினை பதிவிட்டார்.
அவர் கூறுகையில், தன் மகன் பாலச்சந்திரனை சாக கொடுத்துவிட்டு, பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்று இருப்பார் என்று நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையும் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக களத்தில் நின்று சண்டை செய்தவர் பிரபாகரன். என குறிப்பிட்டார்.
மேலும், தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் கோழை அவர் அல்ல. எனவும், போர் முடிந்து 13 ஆண்டுகளாக பிரபாகர் பதுங்கி இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் சொல்லிவிட்டு வர மாட்டார். வந்துவிட்டு தான் சொல்வார். அதனால் தேவையின்றி மக்களை குழப்ப வேண்டாம் ஒருவேளை அவர் மக்கள் முன் தோன்றினால் அப்போது பேசுவோம். என தனது கருத்தினை பதிவிட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…