இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

Published by
Rebekal

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அதிகப்படியான பில் கேட்டதாகவும், அதை கட்ட குடும்பத்தினரால் முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், எஸ்பிபி இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் கூட முழு பணத்தையும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்ட முடியாததால் அவரது உடலை கொடுக்காததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை கூட தர மறுத்ததாகவும் பின் குடியரசுத்தலைவரின் உதவியுடனே எஸ்பிபி சரண் அவர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள எஸ்பிபி சரண், கடந்த வெள்ளிக்கிழமை அப்பா காலமானார். இந்நிலையில் தற்போது பரவி வரக் கூடிய அனைத்து வதந்திக்கு ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டுமானால் அத்தனையும் பொய் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் தற்பொழுது நானும் மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கை வெளியிடப் போகிறோம், இவ்வாறு ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் எனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்த சிகிச்சைகளுக்கும். உதவிக்கும் என்றுமே அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என கூறியுள்ளார். நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு சென்று வந்தது போல கூட இல்லை குடும்பத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்தது போல தான் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago