ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது – அமைச்சர் துரைமுருகன்

Default Image

மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து, தமிழ்நாடு திருப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கர்நாடகா அரசு நாங்கள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று இருக்கிறார்கள். மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  கர்நாடக அரசு அணை கட்ட தீவிர, விஸ்தாரமான அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளக் குழு அனுமதி அளித்துள்ளது நியாயம்தானா என கேள்வி எழுப்பினேன். அதற்கு மத்திய அமைச்சர் அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்த காரணத்தினாலே அணையை கட்டிவிட முடியாது. அதற்கு பின் பல பிரச்சனைகள் உள்ளது, பல அனுமதிகள் தேவைப்படுகிறது என தெரிவித்தார் என கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், நதிநீர் பிரச்னை தொடர்பான தமிழ்நாட்டின்  கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்