எனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் -பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் அதிரடி அறிக்கை

Default Image

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்த நாளை பரமக்குடியில் கொண்டாட உள்ள நிலையில் நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அவரது அறிக்கையில், எனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் நடக்கும் என் தந்தையின் சிலை திறப்பு விழாவில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது.இந்த விஷயத்தில் எந்த ஒரு காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டது என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi
DC wins - KL Rahul celebration