என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே தவறாக பதிவிடாதீர்கள் ..  – தேமுதிக தலைவர் பிரேமலதா !..

Published by
அகில் R

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துருந்ததாக  தகவல் வெளியாகி இருந்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!

தேமுதிக கட்சியன் ஆலோசனை கூட்டம் ஏழாம் தேதி  நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரும், பொதுச்செயலாரும் ஆன  பிரேமலதா அவரகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ஆளுநரின் செயலை குறித்தும் அத்துடன்  ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

சட்டசபையில் ஆளுநரின் வெளி நடப்பு குறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ” ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு முறையும்  சட்டசபைக்கு வரும் பொழுது இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்யமான விஷயம் கிடையாது. மேலும், ஆளுநரும் தமிழக அரசும் நகமும், சதையுமாக இணைந்து பயணித்தால் தான் நாட்டுக்கும், மக்களுக்கும் அது நல்லது.

இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக இருந்தால் அதனால் பாதிக்க பட போவது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆவார்கள். இது ஒரு வருந்ததக்க விஷயம்,  இது தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காதது எல்லாம் இன்று சட்டசபையில் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் ஏற்ப்பட்ட ஒரு தலை குனிவாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

அதன் பின் கூட்டணி அலோசனை குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது அவர் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டை வைத்தார். அவர் பேசுகையில், ” நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம், நான் தமிழில் தான் சொல்கிறேன், நாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே ஊடகங்கள் அதை தவறான கருத்தாக  பதிவை செய்கின்றனர்.

மீண்டும் நான் சொல்கிறேன், அன்று மாவட்ட கூட்டணியின் ஆலோசனை முடிவடைந்த உடன் நான் ஊடகங்களை அழைத்து பேசினேன். அதில், எங்கள் மாவட்ட செயலாளர்களுடைய கருத்துக்கள் இன்று கேட்கபட்டுள்ளது எனவும் இது முதல் ஆலோசனை கூட்டம் தான் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கும் எனவும் அப்போது நாங்கள் எங்கள் இறுதி முடிவை சொல்வோம். மேலும், இது ஒரு விவாதம் தான் முடிவு இல்லை எனவும் நான் தெளிவாக கூறி இருந்தேன்.

அதில் மாவட்ட செயலாளர்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பது சில மாவட்ட செயலாளர்களின் கருத்தாக இருந்தது.  திமுக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது வேறு சில செயலாளர்களின் கருத்தாக இருந்தது. அதே போல், 2014 ஆம் ஆண்டு நடந்ததை போல 14 சீட் அளித்து மரியாதையாக வரவேற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது செயலாளர்கள் கருத்தே ஆகும்.

ஆனால், இன்று அனைத்து ஊடகங்களும் 14+ 1 சீட் கொடுத்தால் தான்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள் கூட்டணி அமைப்பர் என்று பதிவிடுகிறீர்கள்.  இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்பட்டப்பின் அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வருகிறதோ அதுவே எங்களது இறுதி முடிவாக இருக்கும். அதனால், தவறான கருத்தை பதிவிடாமல் தயவு செய்து உண்மையான பதிவுகளை பதிவிடுங்கள், ” என்று தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியுள்ளார்.

 

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago