காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க கூடாது -ரஜினி !

சற்று நேரத்திற்கு முன் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி கூறுகையில் , தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ராஜதந்திரத்தோடு காஷ்மீர் விவகாரத்தை கையாண்டார்கள். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன் என கூறினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? என்ற கேள்வி எழுப்பினர் . அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் காத்திருந்து பாருங்கள் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025