மிஸ் பண்ணிடாதீங்க..! கோடையில் கோலாகலமாக தொடங்கிய 61வது மலர் கண்காட்சி..!

Published by
அகில் R

சென்னை :  கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே அந்த வெப்பத்தை தாக்கத்தை தனிப்பதற்கு கொடைக்கானல், ஊட்டி என்று சென்று வருவோம். அதிலும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் இந்த மே மாதம் கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் தொடங்கிவிடும்.

தற்போது, இந்த ஆண்டும் இன்றைய நாளில் மலர் கண்காட்சிகளுடன் கோடை திருவிழாவானது கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடங்கியுள்ள 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது இன்று காலை 8 மணி அளவில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடை திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இன்று தொடங்கிய இந்த மலர் கண்காட்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசகன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அவருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இவர்களுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சியானது தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்த கோடை விழாவானது வருகிற மே-2 ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்க்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குபிறகு கோடைவிழா நடைபெறுவதால் கொடைக்கானல் நகரமே விழாக்கோலம் போல காட்சியளித்து வருகிறது. அதே போல கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

9 hours ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

9 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

11 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

11 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

14 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

15 hours ago