கொடியவர்களை தப்ப விடக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

Default Image

பெண்களையும், குழந்தைகாலையும் சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக் கூடாது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறுகையில், ‘திருச்சி ருகே 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்களையும், குழந்தைகாலையும் சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக் கூடாது என்று தெரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டு என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்