நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்று முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம் தொடர்பாக தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோளை முன்வைத்து செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா அச்சுறுத்தலால் நாளை கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக அவரவர் இடங்களிலேயே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…