வீட்டிற்கு வெளியே வந்து மரணத்தை சந்திக்க வேண்டாம்.! தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக விலகலின் அவசியம் குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் கருத்து கூறியுள்ளார்.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் . கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் வரும்காலம் கடினமாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறியுள்ளார்.