கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அவர்கள் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி அவர்களின் காரில் ஏற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.இதனால்,சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
குறிப்பாக,கடந்த ஆண்டு தான் பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்தார் என்றும்,ஆனால்,தற்போது வெளிநடப்பு செய்யாமல் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,பேசிய உதயநிதி அவர்கள்,வெளிநடப்பு செய்தால் தனது காரில்தான் ஏற முயல்கிறார் எனவும், எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் என்றும்,ஆனால் கமலாயம்(பாஜக அலுவலகம்) மட்டும் செல்ல வேண்டாம் என்று கூறிய எம்எல்ஏ உதயநிதி,தானும் 3 நாட்கள் தவறுதலாக ஈபிஎஸ் அவர்களின் காரில் ஏற முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே,இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் அவர்கள்,அதிமுகவினரின் கார் எப்போதும் எம்ஜிஆர் அலுவலகம் மேட்டுமே செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…