‘பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்’ – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு..!

Default Image

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது நண்பர்கள் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முகநூல் கணக்கில் இருந்து தனது பெயரை சொல்லி யாரும் பணம் கேட்டால், யாரும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்