மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தெருநாயைப் பரிசோதனை செய்தனர். அதில் நாயின் வயிற்றில் 8 குட்டிகள் இருந்ததும், அதில் 4 குட்டிகள் இறந்துவிட்டதால் குட்டிப்போட முடியாமல் நாய் தவித்துள்ளது தெரியவந்தது.இதனால் உடனே தாமதிக்காமல் மருத்துவர்கள் உடனே, அறுவை சிகிச்சை செய்து, நாயின் வயிற்றில் இறந்த 4 குட்டிகளை வெளியே எடுத்தனர். அதன்பிறகு உயிருடன் இருந்த மற்ற 4 குட்டிகளையும் எடுத்து, அந்த குட்டிகளையும் அதன் தாய் நாயையும் காப்பாற்றினர்.தெரு நாய் தானே என்று நினைக்காமல் எல்லாம் உயிரும் ஒன்று தானே என்ற அப்பகுதி மக்களின் கருணை உள்ளத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…