நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா..? – சீமான்

Nam-Tamilar-Katchi-Leader-Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சந்தனமரங்கள் தான் இந்த மாவட்டத்தில் பெரிய வருவாயை ஈட்டி கொடுத்தது. வீரப்பன் மீது அநியாயமாக பலி போட்டார்கள். அவர் அந்த காட்டில் இருந்தவரை ஒருவனும் காட்டிற்குள் செல்லவில்லை.

அவர் இருந்திருந்தால், இன்றைய காவேரி நிலை வந்திருக்காது. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் மீது வீணாக பழி சுமத்தினர். நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? என கலகலப்பாக பேசியுள்ளார். அவரையே திருடன் என்று சொன்னால் இங்குள்ளவர்களை என்ன சொல்ல போகிறீர்கள்.

நமக்கு காட்டுவள பாதுகாப்பு குழு ஒன்று உள்ளது. அது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. சந்தனமரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். வேட்பாளர் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவோம். இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான பிரச்சனைக்கு யார் முன்னுக்கு நிற்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தலைவன் என தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya