முதல்வரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதா? – வைகோ கண்டனம்

Published by
பாலா கலியமூர்த்தி

முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் துறைகள் 2 அமைச்சர்களுக்கு மாற்றியிருப்பாத ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுந்திருந்தார்.

முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை misleading & incorrect என ஏற்க மறுத்துள்ளார் ஆளுநர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை எனவும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ கூறுகையில், அரசியலமைப்பு சட்டப்படி மாநில அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடமில்லை.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163-ன் படி அமைச்சரவையில் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும்.  இலாகா மாற்றம் குறித்த முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. முதல்வர் பரிந்துரை பேரில் அமைச்சரவையில் மற்ற உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். முதல்வர் மீண்டும் கடிதம் அனுப்பினால் அதை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

1 hour ago

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

2 hours ago

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

10 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

11 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

11 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

11 hours ago