தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 21 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும் 2 பேர் வீடு திரும்பியுள்ளதாக கூறினார். இதில் ஒருவர் 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 26ம் தேதி பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். மேலும் குணமடைந்த மூதாட்டிக்கு மருத்துவக் குழுவினர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர் என ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…