7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்து 3 மாதங்கள் கடந்துவிட்டது. இரவு பகல் பாராமல் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 

இந்த நிலையில், 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். பின்னர் அவரது குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

52 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago