வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் தங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி, அம்பாசமுத்திர தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு ரூ.246.73 கோடி, சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் சொத்து மதிப்பு ரூ.211 கோடி, எம்கே மோகனின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.41 கோடி உயர்ந்துள்ளது.
இதையடுத்து கோவை தெற்கில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.176 கோடி,அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.161 கோடி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற செல்வந்தர்களின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மறைந்த வசந்தகுமார் எம்பி ரூ.337 கோடி சொத்துக்கள் வைத்திருந்தார்.
மேலும் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்கே மோகன் ரூ.170 கோடி சொத்துக்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும்போது ரூ.113 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…