எதிர்பார்த்தது கிடைக்குமா? அதிமுக – தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை.!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவிடம் இன்று மாலை மீண்டும் பேசுகிறது தேமுதிக.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும்  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியை சந்தித்து தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்த நிலையில், மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

பாமகவுக்கு தரும் அங்கீகாரம் தங்களுக்கு தரப்படவில்லை என தேமுதிக தரப்பில் குற்றச்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கியது போல் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் குறைந்தது 20 தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

வரும் சட்டமனற்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை வழங்கப்படுவதாக அதிமுக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்தது. இதனிடையே, சுதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் கொட்டும் முரசு என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதிமுக – தேமுதிக. இன்று நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிரிபார்த்தது கிடைக்கவில்லை என்றால், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி ஏற்படும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago