குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? -ரஜினிக்கு சீமான் கேள்வி

Default Image
  • எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
  • குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்தார்.இவரது பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஓரு சேர கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்