மாஞ்சோலை : மாஞ்சோலை குடியிருப்புகளை மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள் காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மாஞ்சோலை விவகாரத்தில் அங்குள்ள தொழிலார்களில் ஒருவரான அமுதா என்பவர் மாஞ்சோலையிலிருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்லம், அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் அதுவரை ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மின்சார வசதி வழங்கிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு நடந்த விசாரணையில், தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஏதேனும் வழங்க வேண்டும்.
இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அதோடு தொழிலரகளுக்கு 75 சதவீத பணப்பலன்களையும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை ஜூலை 22-க்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்றைய தனியார் நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மாஞ்சோலை குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர்கள் மறு உத்தரவு வரும் வரை காலி செய்ய வேண்டாம். ஏற்கெனவே 25 சதவீத கருணைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மேலும், மீதமுள்ள 75% சதவீத கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையரிடம் 3 நாட்களில் கொடுத்து விடுவோம்” என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…