மாஞ்சோலை விவகாரம் : ‘குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்’ – தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை

Published by
அகில் R

மாஞ்சோலை : மாஞ்சோலை குடியிருப்புகளை மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள் காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

மாஞ்சோலை விவகாரத்தில் அங்குள்ள தொழிலார்களில் ஒருவரான அமுதா என்பவர் மாஞ்சோலையிலிருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்லம், அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் அதுவரை ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மின்சார வசதி வழங்கிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு நடந்த விசாரணையில், தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஏதேனும் வழங்க வேண்டும்.

இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அதோடு தொழிலரகளுக்கு 75 சதவீத பணப்பலன்களையும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை ஜூலை 22-க்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்றைய தனியார் நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “மாஞ்சோலை குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர்கள் மறு உத்தரவு வரும் வரை காலி செய்ய வேண்டாம். ஏற்கெனவே 25 சதவீத கருணைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மேலும், மீதமுள்ள 75% சதவீத கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையரிடம் 3 நாட்களில் கொடுத்து விடுவோம்” என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Manjolai Issue : Circular by Private Estate Agency
Published by
அகில் R

Recent Posts

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

9 minutes ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

1 hour ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

2 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

3 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

4 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

4 hours ago