அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது !

Default Image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 22-வது நாளான இன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பக்கதர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. இந்நிலையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்தை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார்.

கடந்த காலத்தில் தான் திருட்டு பயம் கருதி அத்திவரதரை பூமிக்கு அடியில் வைத்தனர். ஆனால் தற்போது அதற்கு அவசியம் இல்லை எனவே மேலும் அனைத்து  மடாதிபதிகளும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்