கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம்- முதல்வர்

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த 8 முதல் 20ம் தேதி வரை மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இதுபோன்று பல மாநிலங்களில் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சையான பேச்சுக்கள் கிளம்பியது. இதனால் கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது ஒரு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து  தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்றும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

சென்னை :  மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…

50 minutes ago

படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…

11 hours ago

இந்திய வீரர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்! மனைவிகளை அழைத்து செல்லலாம்.., ஒரு கண்டிஷன்?

டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…

12 hours ago

நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…

13 hours ago

குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…

13 hours ago

பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…

13 hours ago