திமுக தலைவர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வழியில் பயின்றோருக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றி அன்றே அரசு ஆணையம் பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
துவக்கம் முதல் தமிழ்க் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு முழுபயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10 12-ஆம் வகுப்புகளையும், பத்தாம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏறக்குறைய எட்டு மாதங்களாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
துறை அமைச்சர் என்ன செய்கிறார்.? சட்ட அமைச்சரின் ஏன் ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்? முதலமைச்சர் பழனிசாமி அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா..? குரூப்-1 பதவிகளிலேயே முறையாக இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிந்தும் முதலமைச்சர் உரிய அழுத்தம் தராமல் அரசியல் விளம்பரத்திற்காக ஒவ்வொரு ஊராக சுற்றி வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
சட்டத் திருத்தத்திற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; முதலமைச்சரே நேரில் சென்று வலியுறுத்தி இந்த ஒப்புதலை பெற வேண்டும். காலம் தாழ்த்தி அதற்கு -அதற்காக திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாக்கி விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…