மாஸ்க் போடாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தமிழகத்திலும் கொரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 15க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாஸ்க் இல்லாமல் யாரும் வெளியில் செல்லாதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…