கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் கோரிக்கை.
பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது, நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியுடன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…