ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.
டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல் திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த சமயத்தில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.
ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர். மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பதவியில் உள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு எனவும் கூறினார்.
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…