தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் ஒரு கட்சி மற்ற கட்சியை மாறிமாறி குற்றம்சாட்டி வருவதோடு, விமர்சித்தும் வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில், பல கட்சிகள் இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையிலான போட்டி குறித்து தான் இன்று பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது .
அந்த கருத்துக் கணிப்பின்படி, திமுக தலைமையிலான கூட்டணி 43 சதவீத வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் நீதி மையம் 7 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு முதல் ஆறு இடங்களிலும், அமமுக 6.4 சதவீத வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற கட்சிகள் 12.3 சதவீதம் வாக்குகள் மூன்று முதல் ஏழு இடங்களில் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…