அதிமுக ஜெயித்தால் தான்.. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும்.! அண்ணாமலை பேச்சு.!

Default Image

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜெயித்து சட்டசபைக்குள் சென்றால் தான் திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களமானது , தேர்தல் நாள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே செல்கிறது. கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளருக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.  அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அண்ணாமலை பிரச்சாரம் : அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவினரும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு இடையன்காட்டு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதிமுக – திமுக : அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் 517 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் அதில் 49 தான் நிறைவேற்றி உள்ளனர் . அவர்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜெயித்து சட்டசபைக்குள் சென்றால் தான் திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு பேசினார்.

30 அமைச்சர்கள் : தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். அதே போல, சிலிண்டருக்கு 100 ரூபாய் தருவோம் என்றார்கள் எதுவும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்து ,  ஒரே ஒரு அதிமுக வேட்பாளாரை எதிர்த்து 30 அமைச்சர்கள் தேரோட்டில் இருக்கிறார்கள்.  என விமர்சனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்