தமிழ்நாடு

திமுகவினர் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் – ஜெயக்குமார்

Published by
லீனா

காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கரையான் புற்று எடுக்க கருநாகம் உள்ளே புகுந்து விட்டது என சொல்வார்கள் அல்லாவா? அதுபோல தான் திமுக உள்ளே புகுந்து விட்டது.

அதிமுக 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுகவில் கிளைகளாக செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம். அதே போல தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது.

பிரதமர் மோடி, அரசியல் நிகழ்ச்சிக்காக தமிழகம் வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் தான் வெற்றி பெறுவோம். திமுகவும் தோல்வி பயத்தில் தான் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரையில், அவர்களுக்கு ஆளுநர் தேவை என்றால் வாழ்க ஆளுநர் சொல்வார்கள்.

ஆளுநர் தேவையில்லை என்றால் ஒழிக ஆளுநர் என்று சொல்வார்கள். செவ்வாழை தோட்டத்தில் குரங்கு புகுந்து விட்டால் என்ன அட்டகாசம் செய்யுமோ, அதுபோல அதிமுக ஆட்சியிலும் சட்டப்பேரவையில் திமுகவினர் அட்டகாசம் செய்தனர். திமுகவினர் நேரத்திற்கு தகுந்தாற்போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர். இவர்கள் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

35 minutes ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

44 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

53 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

3 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

4 hours ago