கொடுத்த வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என தெரிவித்தார். இதுபோன்று ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார்.
திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக அமைச்சர்கள், விமர்சித்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரை தொடர்ந்து வெள்ளை அறிக்கை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது கொடுத்த வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…