#BREAKING: உத்தரவை மீறிய திமுகவினர்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

Default Image

இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கீடு செய்தது. கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், தேனி அல்லிநகரம், கருமத்தம்பட்டி மற்றும் விசிக-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிகுப்பம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் திமுகவினர் போட்டியிட்டு வென்றது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்