இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Default Image
  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. 
  • மு.க.ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.பின்பு ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் இதற்கு முன்னதாகவே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே இன்று திமுக மாவட்ட செயலாளர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணி அளவில் சென்னை தியாராயநகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு -இல் உள்ள அரங்கில் நடைபெறும்.அதுபோல மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்