அதிமுக இடத்தை பிடித்த திமுக ! கருத்துக்கணிப்பில் பெரும் பின்னடைவை சந்தித்த அதிமுக
கடந்த மக்களவை தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக 38 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.அந்த சமயத்தில் ஜெயலலிதா இருந்த காரணத்தால் அதிமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகம் நிலவி வந்தது.இதனாலயே அந்த கட்சியின் வாக்கு வங்கி அப்படியே சரிந்துள்ளது.குறிப்பாக இளம்தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவை புறக்கணித்து உள்ளார்கள் என்றே கூறலாம்.
இதன் விளைவாகவே நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில்,இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கைப்பற்றிய 38 இடங்களை இந்த முறை திமுக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துள்ளதையே காட்டுகிறது.