2021 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

Default Image
  • திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  •  மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார். 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 39 தொகுதிகளில் வாங்கிய வாக்குகளையும் அதிமுக வாங்கிய வாக்குகளையும் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது. ஸ்டாலின் ஒரு மாயையை உருவாக்குகிறார் .திமுகவிற்கு வளர்ச்சி என்பது இல்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும்.

அதிமுக வாக்கு வங்கியை அதிகரித்து இருக்கிறது .எங்களுடைய வளர்ச்சி நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது .டிஎன்பிசி விவகாரத்தில் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறது .மீண்டும் விளக்கம் கேட்டால் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்