புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம் எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கொள்கை, 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என பலவேறு அம்சங்கள் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கை 2020 பற்றிய கருத்து மேடை நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, அதனை நிராகரிக்க வேண்டும் எனவும், புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.’ எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை கூறியுள்ளார்.
மேலும், ‘ புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு எதிரான கருத்துகளை வெளிபடுத்திவருகிறார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். ‘ எனவும் தனது கருத்தை முக.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…